ஹம்துல்லாஹ் ஜமாலி
பராஹீனே அஹ்மதிய்யா, ரூஹானி கஸாயின், இதன் பகுதிகளான ஹகீதத்துல் வஹி, நுஸுல் மஸீஹ், மற்றும் மல்ஃபூஸாத், துஹ்ஃபயய கோல்டுவிய்யா, தத்கிரத்துஷ் ­ஹாதத்தைன், ஏக்கலத்திக்கா இஸாலா, இஸ்லாமி உஸுல்கி ஃபிலாஸபி – வாசகர்களே! இவையனைத்தும் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? மிர்ஸா குலாம் அஹ்மதை தங்களது நவீன நபியாக ஏற்றிருக்கும் அஹ்மதிகளே! உங்களுக்கு இவை என்ன என்பது தெரியுமா? அகில உலக அளவிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கோ ஏன்? பெரும்பான்மையான காதியானிகளுக்கோ இவை என்ன என்பது தெரியாது. ஒருவேளை காதியானிகளின் H.A. மெளலவிகள் அறிந்து வைத்திருக்கலாம். இவையனைத்தும் காதியானிகளின் வேத நூல்கள். இவையன்றி இவர்களது கலீஃபாக்களின் பேச்சுக்கள், இவர்களது குறிக்கோளை நியாயப்படுத்தும் பவிஷ்ய மகாபுராணம், ராஜ தரங்கணி,விஷ்ணு புராணம் பலாகரும் புத்தாசஃபும், ர­ஸாத்துஸ்ஸபா,மற்றும் ஒரு சில சரித்திர நூல்களும், தேவையெனில் பைபிள் போன்றவைகளும் இவர்களது ஆதார நூல்களாகும். இந்நூல்கள் கூறும் கருத்துக்களையும், தங்களது வாதங்களையும் நியாயப்படுத்த திருகுர்ஆன் வசனங்களையும், நபி மொழிகளையும் தங்களது விருப்பப்படி வளைத்தும், திரித்தும் கூறுவார்கள்.
பெரும்பான்மை முஸ்லிம்களுக்கும் ஏன், காதியானிகளுக்கும் தெரியாத இவ்விஷயங்கள் எங்களுக்கு எப்படி கிடைத்தது என்ற நியாயமான கேள்வியை நீங்கள் கேட்கலாம். நாங்களும் இந்நூல்களை பார்த்ததோ, எங்களிடம் உறவாடி, உரையாடி வரும் காதியானிகள் மூலமோ அறிந்ததோ கிடையாது. இவையனைத்தும் தமிழக காதியானி இயக்கத்தாரின் மாத இதழான சமாதான வழி மூலம் அறிந்ததாகும். இவர்களுடன் நாம் அன்மையில் உரையாடி இவர்களது கொள்கை கோட்பாடுகளை ஓரளவு இரத்தினச் சுருக்கமாக அறிந்து கொண்ட பின் இவர்களது மாத இதழான சமாதான வழியைப் படித்த போது நாம் பெற்ற விஷயங்களை முஸ்லிம்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இவர்களையும், இவர்களது நவீன நபியின் தடுமாற்ற நிலையையும், மக்களுக்கு எடுத்துக் காட்டவே எழுதுகிறோம். காய்தல் உவத்தலின்றி பகுத்தறிந்து குறிப்பாக இவர்களது செல்வ செழிப்பு, கோயபல்ஸ் கொள்கை, பகுத்தறிவு வாக்குவாத மாய வலையில் வீழ்ந்துள்ள காதியானிகள் நேர்வழி பெற வேண்டுகிறோம்.
தடுமாற்றம் 1:
ஹஸ்ரத் அஹ்மது(அலை) அவர்கள் தம் வாதத்தில் உண்மையாளர் என்பதற்கு ஆதாரமாகக் கூறிய விஷயங்களில் முதன்மையானது இதுவாகும். அல்லாஹ்வின் தூதர் மஸீஹிப்னு மரியம் இறந்து போய்விட்டார். அவரின் சாயலில் வாக்குறுதிக்கு ஏற்ப நீர் வந்திருக்கிறீர்.
(ரூஹானி கஸாயின், பாகம் 3, பக்கம் 402, ச.வ.: நவ.95, பக்.19)
இங்கு நவீன நபி மிர்ஸா குலாம்தான் மஸீஹிப்னு மரியம் சாயலில் வந்துள்ளதாக சொந்த வாக்குமூலம் தருகிறார்.
1.”பராஹீனே அஹ்மதிய்யாவில்” என் பெயரை இறைவன் முஹம்மது என்றும் அஹ்மத் என்றும் கூறி, எனது வருகையை ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் வருகை என்றே கூறியுள்ளான்.
(சமாதான வழி பிப்ரவரி 96,பக்கம்9)
2. நான் பிரதி பிம்பமான பரூஸியாக (நிழலாக) முஹம்மது(ஸல்) அவர்களாகவே இருக்கும்போது, அவ்வாறே முஹம்மதின் எல்லாப் பூரணத்தன்மைகளும் நபுவ்வத்தே முஹம்மதிய்யாவோடு கலந்து நிழல் போன்று என் கண்ணாடியில் பிரதி பிம்பமாக இருக்கிறேன்.
(ச.வ.: பிப்ரவரி 96,பக்கம் 9)
பராஹீனே அஹ்மதிய்யாவிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது வாக்கு மூலத்தின் பிரதி பிம்பம், பரூஸி,நிழல், கண்ணாடி போன்ற சொற்றகளும் அவை தெரிவிக்கும் செய்தியும் உங்களுக்கு விளங்குகிறதா? விளங்கவில்லையயனில் காதியானிகளிடம் கேட்டுபப் பாருங்கள். கீழ்காணும் விளக்கங்களைத் தரலாம்.
1. இதனை அறிந்து கொள்ள ஆன்மீக, அறிவு, ஞானப் பார்வை தேவை. அப்பார்வையை, அறிவை அவர்களது நவீன நபியை ஏற்றால்தான் பெற முடியும் என்று கூறுவர். இது கிறித்துவர்களின், ஜீஸஸை கடவுளின் மைந்தன், கடவுள் என்று ஏற்றால் தான் ஈடேற்றம் பெற முடியும் என்ற வாதத்தை போன்றது. அல்லது.
2. தரீக்காவாதிகள் “”ஃபனாஃபில்லாஹி” அல்லாஹ்வுடன் ஐக்கியமாகித்தானே அல்லாஹ்வாக மாறி “அனல் ஹக்”- நானே உண்மைக் கடவுள் எனக் கூறுவது போல இவர்கள், தங்களது நவீன நபி குலாம் மிர்ஸா முஹம்மது(ஸல்) அவர்களிலே ஃபனாவாகி இச்சிறப்பைப் பெற்றதாகக் கூறுவார்கள். இது நமது சொந்த ஊகமல்ல. அவர்களது சொந்த வாக்கு மூலத்தைப் பாருங்கள்:
இந்த எல்லாச் சிறப்புகளும் வானத்தைச் சேர்ந்த பரிசுத்த மகானான ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் ஆத்மீகமான ஐக்கியத்தை நான் அடைந்த காரணத்தினாலேயே கிடைத்தன. அவர்களின் மூலமாக, அவர்களிலே நான் ஃபனாவாகி அழிந்து (அவர்களுக்காக நான் அர்ப்பனமாகி) அவர்களின் பெயராகிய முஹம்மது, அஹ்மது என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட காரணத்தால் நான் ரஸூலாகவுமிருக்கிறேன்; நபியாகவுமிருக்கிறேன். (ச.வ.: பிப்ரவரி 1996, பக்கம் 8)
கவனிக்க: தான் நபியாகவும், ரசூலாகவுமிருப்பதற்கு இங்கு காரணங்களைக் கூறுகிறார். 1. தான் ஃபனா ஃபி முஹம்மது(ஸல்) அவர்கள். 1. தான் அஹ்மது, முஹம்மது என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. அல்-ஹம்துலில்லாஹ் அஹ்மது என்ற பெயர் ரசூல்(ஸல்) அவர்களுக்கு இருந்ததை ஏற்றுக் கொள்கிறார்.

மிர்ஸா குலாம் அஹ்மத் ரூஹானி கஸாயின் பாகம் 3. பக்கம் 402ல் தான் மஸீஹிப்னு மரியம் சாயலில் வந்துள்ளதாகக் கூறுகிறார். பராஹீனே அஹமதிய்யாவில் தானே அஹ்மது, முஹம்மது, அவர்களது பிரதி பிம்பம், நிழல்,கண்ணாடியின் பிரதிபிம்பம் என்கிறார். தான் மஸீஹிப்னு மரியமின் சாயலாக இருப்பதாக ரூஹானி கஸாயினில் கூறிய அதே நவீன “ஏக் கலத்திக்கா இஸாலா” என்ற நூலில் தான் முஹம்மது(ஸல்) அவர்களின் சாயலாகவும், அவரின் பெயரைப் பெற்றவராகவுமிருப்பதாக வாதிடுகிறார். (நபி(ஸல்) அவர்கள் ஈஸா(அலை) அவர்களின் சாயலில் இருந்ததாக வாதிட்டதில்லை) (ச.வ.:ஜன.96.பக்.23)
ஏன் இந்த தடுமாற்றம். இவ்வியக்கத்தின் H.A. மெளலவிகள், ஆலிம்கள், அறிஞர்கள் இதனையும் தங்களது வாக்கு வாதத் திறமையால் விளக்கமளிப்பார்கள். அதனையும் நாம் பரீசிலிக்கத் தயாராக இருக்கிறோம்.
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறோம். இவர்களும் தரீக்கா கொள்கையைக் கொண்டவர்கள். சாதாரணமாக அல்லாஹ்வுடன் ஃபனாவாகி விட்டதாக தங்களது பீர், வலிமார்களை தரீக்காவாதிகள் கூறுவர். ஆனால் இவர்கள் தங்களது நவீன நபி மிர்சா, ரசூல்(ஸல்) அவர்களுடன் ஐக்கிய மாகி ஃபனாவாகி விட்டதாகக் கூறுவர். இதுவே வேறுபாடாகும். மேலும் இவர்கள் தரீக்காவாதிகள் போல சூபியிஸ்ஸத்தை வரவேற்பர். தங்களது கலீஃபாவிடம் பைஅத் செய்தால் தான் ஈடேற்றம் பெற முடியும். இவர்களது கலீஃபாவை ஏற்காதவர்களும், பைஅத் செய்யாதவர்களும் பாவிகள், ஈடேற்றம் பெறாதவர்கள் எனக் கூறுவார்கள். இவர்களது தரீக்காவையும் தனியாக நாம் இன்ஷா அல்லாஹ் விமர்சிக்க இருக்கிறோம். (வாசகர்கள் விரும்பினால்).
தடுமாற்றம் 2:
இறைவன் எனது உண்மைக்குச் சாட்சியாக மூன்று இலட்சத்திற்கும் அதிகமான அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளான் என தன்னைப் பற்றிக் கூறும் மிர்ஸா குலாம் அதே பாராவின் கடைசியில்: நூற்றுக்கணக்கான இறையடையாளங்கள் இருந்தும் என்னை அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாகக் கருதுகின்றார்களே அவர்கள் எவ்வாறு நம்பிக்கையாளர்களாக இருக்க முடியும்?
(ஹகீகதுல் வஹி ரூஹானி கஸாயின் தொகுதி 22,
பக்கம் 167 ச.வ.: ஜனவரி 1996 பக்கம் 14)
சொந்த வாக்குமூலத்தின் -ஒரே வாக்கு மூலத்தின் ஆரம்பத்தில் மூன்று இலட்சத்திற்கு அதிகமான இறையடையாளங்கள் என்றும் முடிவில் நூற்றுக் கணக்கான இறையடையாளங்கள் என்றும் கூறியுள்ளாரே! ஏன் இந்த தடுமாற்றம்? ஒருவேளை 3000 நூறுகளைக் கொண்டது மூன்று இலட்சமென விளக்கமளிப்பார்களோ! என்னவோ! யாமறியோம்.
தடுமாற்றம் 3:
இன்றைய நாள் வரை நான் ஏறக்குறைய 150 முன்னறிவிப்புகளை இறைவன் புறமிருந்து பெற்று, அவை தெளிவாக நிறைவேறியிருப்பதை என் கண்களால் நானே கண்டிருக்கும் போது நான் எவ்வாறு என்னை “நபி” அல்லது “”ரஸூல்” என்று கூறிக் கொள்வதை நிராகரிப்பேன்.
(ஏக் கலத்திக்கா இஸாலா மொழி பெயர்ப்பு ச.வ.: பிப்ரவரி. 96. பக்.7)
இவ்வாக்கு மூலத்தில் என்ன தடுமாற்றம் என வினவலாம். சாதாரணமாக பார்ப்பவர்கள் மிர்ஸா குலாம் மூலம் அல்லாஹ் 150 முன்னறிவிப்புகளை வெளியாக்கி நிறைவேற்றியுள்ளான். அந்த அளவு அவர் சிறப்பு மிக்கவர் என புகழவே செய்வர். அந்த முன்னறிவிப்புக்கள் யாவை? உலகில் எவ்வளவு பேர் அதனைக் கண்ணுற்றார்கள்? என்பது நமது வினா? இவ்வினாவை எழுப்பி விடக் கூடாது என்றே தனது வாக்குதிறமையுடன் “என் கண்காளல் நானே கண்டிருக்கிறேன்” எனக் கூறுகிறார் ஏன்? மற்ற உலக மக்களால் காண முடியவில்லை என எதிர் கேள்வி கேட்டால், ஆன்மீக பார்வை,ஞானக் கண், அவரை நபியாக ஏற்றல் என்ற பண்புகளற்றவர்களால் பார்க்க முடியாது. பெரும்பான்மையினர் இந்நிலையில் உள்ளதால் “”தன்னைத் தவிர வேறு எவரும் பார்க்கவில்லை” எனக் கூறியதாக இவ்வியக்க அறிஞர்கள் வாதிடுவார்கள்.
தடுமாற்றம் 4:
ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நம்பிக்கையாளர்களின் தந்தையாக விளங்குகின்றார். அவர் ஆன்மீகத் தந்தை என இன்றைய காதியானிகளின் H.A.மெளலவிகள் கூறுகின்றனர். (பார்க்க:ச.வ. நவம்பர் 95, பக்கம் 13-15) ஆனால் இவர்களது நவீன நபி குலாம் மிர்ஸா தனது “”ஏக் கலத்தீக்கா இஸாலா” என்ற நூலில் கூறுவதைப் பாரீர்.
“முஹம்மது இவ்வுலக மனிதர்களின் தந்தையல்ல; ஆனால் அவர் மறுவுலக மனிதர்களின் தந்தையாக இருக்கின்றார்”
(ச.வ.ஜூன் 96, பக்.22)
இக்கூற்றுகளுக்கு அவர்கள் நேரடியான குர்ஆனு;, ஹதீஸ் ஆதாரங்களைக் கூறாமல் தங்களது விருப்பத்திற்கொப்ப 38:41 வசனத்தை வளைத்து, திரித்து எழுதியுள்ளனர். ஒரு நபிமொழியைக் கூட எடுத்துக் காட்டவில்லை. நாமறிந்தவரையில் அல்லாஹ் தனது திருமறையில் ” மில்லத அபீகும் இப்ராஹீம்”(உங்கள் தந்தை இப்ராஹீமின் சமுதாயம்) என இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு அருளியது போல, பரக்கத் செய்தது போல தனக்கும் அருளும்படி வேண்ட ரசூல்(ஸல்) அவர்கள் ஸலவாத்தில் நமக்கு கற்றுத் தந்தார்கள். ஆனால் இவர்களோ ரசூல்(ஸல்) அவர்கள் அனைவருக்கும் தந்தையென வாதிடுகின்றனர். தங்களது வாக்குவாத திறமைகளால் ஆன்மீகம், பெளதீகம், இல்ஹாம், வஹீ, தெய்வீகக் காட்சி என்ற வார்த்தைகளை கொண்டு விளையாடுகின்றனர். பொய்யை திருப்பித் திருப்பிக் கூறினால் உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் கொள்கையை தங்களுது வாதத்தில் நிரூபித்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி இவர்கள் அல்லாஹ்வின் அருள்மறை திருகுர்ஆனிலும், நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும் தாங்கள் விரும்பியபடி விளையாடியுள்ளனர். சாதாரணமாக விளங்கும் ஆயாத்துல் முஹ்கமாத் -தெளிவான சட்ட – வசனங்களை ஆன்மீக, தத்துவார்த்தப் பொருள் கூறி குர்ஆன் விளங்க முடியாதது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். தங்களது நவீன நபி மிர்சா குலாமுக்கு, முஹம்மது(ஸல்) அவர்கள் மீது அளப்பரிய அன்பு இருந்ததாகக் காட்டிவிட்டு, பல இடங்களில் மிர்சா குலாமை ரசூல்(ஸல்) அவர்களை விட மிக மிக உயர்ந்தவராகச் சித்தரிக்கின்றனர். இவையனைத்திற்கும் அவர்களது இயக்க மாத இதழ் சமாதான வழி மூலம் எழுத்து வடிவ ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.
வாசகர்களே! காதியானிகளை உங்களுக்கு அடையாளம் காட்ட வேண்டுமென்ற ஆசையில், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பது போல ஒரு சில முரண்பாடுகளை எடுத்து எழுதியுள்ளோம். இதற்கு வாசகர்களிடையேயுள்ள வரவேற்பைப் பார்த்து இத்தொடர் தொடரலாம். இந்நிலையில் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள காதியானிகளின் ஆதார நூல்களை எவராவது எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவர்களது ஒரிஜினல் நூல்களையே வரிக்கு வரி குர்ஆன்- ஹதீஸ் அடிப்படையில் பரிசீலிக்கவும், விமர்சிக்கவும் தயாராக உள்ளோம். அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.
                      நன்றி-அந்நஜாத்