செயல்களில் ஷிர்க் என்பது எவ்விதம் இறைவனால் மன்னிக்கப்படாத பாவமோ அவ்விதம் பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் சில வார்த்தைகள் ஷிர்க் என்னும் பெரும்பாவத்தில் கொண்டு சேர்க்கும். நம்மையும் அறியாமல் நாம் உபயோகப்படுத்தும் சில வார்த்தைகள் ஷிர்க்காணவை என்பதை உணர்த்த 'தமிழ் சங்கமி' பதிவில் வெளியான கட்டுரையை நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்கிறோம்.
--------------------------------------------------------------------------------
நாட்டிலே, மக்கள், தம் பேச்சிலும் எழுத்திலும் உரையாடல்களிலும் பல சொற்களை - சொற்றொடர்களைக் கையாண்டு வருகின்றனர்.அவற்றுள் சில, பகுத்தறிவுக்கு மாறானவை; அறிவியலுக்குப் புறம்பாவை; ஒவ்வாதவை; முரணானவை; எதிரானவை.அவற்றை, சமயப்பற்றும், நம்பிக்கையும் கொண்டிருப்பவர்கள் கையாள்வதை நாம் பொருட்படுத்தப் போவதில்லை.ஆனால், நம்மில் சி(ப)லர் அறிந்தோ அறியாமலோ, அவை பகுத்தறிவுக்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் மாறானவை என்று கருதாமலோ பழக்கம் காரணமாக அத்தகைய சொற்(றொடர்)களைக் கையாண்டு வரும் நிலையினை நடைமுறையில் நாம் கண்டு வருகிறோம்.இப்படிப்பட்ட நிலையில் உள்ள பகுத்தறிவாளர்கள் பயன்படுத்தக் கூடாத அவற்றுள் சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டி, தெளிவுபடுத்துவது நலம் பயக்கும் என்பதோடு அது வழிகாட்டும் கையேடாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் சிலவற்றைச் சுட்டிக் காட்டி விளக்கம் அளித்திருக்கிறோம்.இச்சொற்(றொடர்)கள் தூய தனித்தமிழ்ச் சொற்கள், வடமொழிச் சார்புச் சொற்கள் என்ற கண்ணோட்டத்தில் பாராமல் வழக்கத்தில் உள்ள நடைமுறைச் சொற்கள், சொற்றொடர்கள் என்ற நிலையில் மட்டும் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கம் தரப்பட்டுள்ளன.பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஆக இருக்க எண்ணமும் விருப்பமும் உடையவர்களுக்கு இம்முயற்சி நல்ல பயன் தரும் என்று நம்புகிறோம்.அதிர்ஷ்டம்நல்ல நிலை அல்லது நன்மை ஏற்படும்போது பலர், அதிர்ஷ்டவசமாக எனக்கு அது கிடைத்தது; இப்படி அமைந்தது எனது அதிர்ஷ்டம் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். எழுதுவதைப் படித்திருக்கிறோம்.இது பகுத்தறிவுக்கு ஒவ்வாததுதிருஷ்டம் என்னும் வடசொல்லுக்குப் பார்வை எனப்பொருள் அதிர்ஷ்டம் (அ-திர்ஷ்டம்) பார்வையற்றது; பார்க்க முடியாதது; குருட்டுத் தனமானது; குருட்டாம் போக்கிலானது; கண்ணுக்குத் தெரியாதது எனப் பொருள்.நன்மை எதிர்பாராமல் வாய்க்கும் போது அதற்குக் காரணம் தெரியாமல் அல்லது கண்டறியாமல் உடனே அது அதிர்ஷ்டம் அதாவது கண்ணுக்குத் தெரியாத சக்தி என்கிறார்கள்; அதிர்ஷ்டவசமாக வந்தது என்பர்.ஆங்கிலத்தில் இது, unluck, unlucky என்று கூறப்படுகிறது.இப்படிப்பட்ட சொற்களும் சொற்றொடர்களும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.அப்படிச் சொல்ல, எழுத நேரிடுமானால், நல்வாய்ப்பு, நல்வாய்ப்பாக, கெட்ட வாய்ப்பு, கெட்ட வாய்ப்பாக எனப் பயன்படுத்தலாம்.அமிர்தம்ஆகா! இந்த உணவு சிற்றுண்டி - தீனி - திண்பண்டம் - இனிப்பு அமிர்தம் ஆக இருக்கிறது!தேவாமிர்தம் தோற்றுப் போகும்! என்று வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இது வடசொல் - தொடர்கள்மார்த் என்றால் இறப்பு எனப் பொருள்அ-மர்த் - இறவாமை; அமந்த் - அமிர்தம்; தேவாம்ருதம்;தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து பெற்றது அமிர்தம் தேவாம்ருதம்இதனை உண்டால் சாவே இல்லை; இதனை உண்டதால்தான் தேவர்கள் சாகாநிலை பெற்றவர் - என்பது இந்து மதப்புராணிகம்.இந்த அமிர்தம்; அமுது, அமுதம் எனவும் வரும். இப்பயன்பாடு விலக்குதற்குரியது.அமிழ்தம் - என்பது தமிழ்ச் சொல்; அமிர்தம் என்பதும் அமிழ்து, அமிழ்தம் என்பதும் வேறு வேறு;அமிழ்-து - அமிழ்து; வானில் இருந்து அமிழ்ந்து, கவிந்து வரும் உணவு அமிழ்து. (து-உணவு) அமிழ்து - அமிழ்தம் என வரும்.இச்சொல் மழையைக் குறிக்கும்.வானின் னுலகம் வழங்கி வருதலான் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று - குறள் 4 என்கிறார் திருவள்ளுவப் பெருந்தகை.அட்சயப் பாத்திரம்அள்ள அள்ளக் குறையாதது அட்சய பாத்திரம் என்பது வழக்கில் உள்ள தொடர்.இது அமுதசுரபி எனவும் கூறப்படுகிறது.அது என்ன அட்சய பாத்திரமா? அள்ள அள்ளக் குறையாமல் அளித்தர? என்று கூறப்படுகிறது.இதுவும் புராணிகச் சொல்லே!வடமொழியில் க்ஷயம் என்பது தேய்வது; குறைவது; அழிவது.அ+க்ஷயம் - அக்ஷயம் தேயாதது; குறையாதது; அழியாதது.இச்சொல் தமிழ் வடிவில் அட்சயம் என எழுதப்படுகிறது.மணிமேகலையில் வரும் ஆபுத்திரனிடம் இந்த அட்சய பாத்திரம் அமுத சுரபி எனப்பட்டது.இதில் போடப்பட்ட உணவு அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருந்ததாம்.அபுத் திரன்கை அமுத சுரபி எனும் மாபெரும் பாத்திரம் மடக்கொடி, கேளாய்! என்கிறது மணிமேகலை.அமரர்அந்தத் தலைவர் அமரர் ஆகிவிட்டார்! மறைந்த அமரர் அப்பாத்துரை கூறியது போல! என வழக்கத்தில் பேசப்படுவதை அறிவோம்:இந்த வடசொல் அ+மார் எனப் பிரிபட்டு சாகாதவர் என்று பொருள்தரும்.மார் - இறந்தவர்; அ+மார் - இறவாதவர்மானமற்றவர்; இறந்தும் இறவாதவர்; தேவர் என்ற பொருளில் வரும்.புராணிக - வடசொல் இது.இதனைத் தவிர்க்க வேண்டும்.மாறாக, நினைவில் வாழும் என்னும் தமிழ்த் தொடரை வழங்கலாம். - பேராசிரியர் ந.வெற்றியழகன் எம்.ஏ.,பி.எட்